செய்திகள்

அனைத்து தியேட்டர்களில் இருந்தும் இனம் படம் நிறுத்தம் – லிங்குசாமி

நாளை முதல் இனம் படம் அனைத்து திரையரங்குகளிலுல் இருந்தும் நிறுத்தப்பட உள்ளது. படத்தின் தயாரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ். அதன் உரிமையாளர் லிங்குசாமி பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

குஜராத் அரசு இரட்டை வேடம் போடுகிறதா? காஸ் (Gas) விலையை உயர்த்த கோரி எழுதிய கடிதம் – ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட,  காஸ்(Gas) விலையை உயர்த்தக் கோரி குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ஃப்ரேஷன் லிமிட்டெட் (Gujarat State Petroleum Corporation Limited) எழுதிய கடிதத்தின் நகல். இது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பிய போது எவரும் பொருத்தமான பதிலை தரவில்லை என்பது அக்கட்சியின் கூற்று.

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் – ராஜபக்சே உத்தரவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் 98 தமிழக மீனவர்கள் இருப்பதாக, அந்நாட்டு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நேற்று, இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை …

மேலும் படிக்க

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை. மோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித …

மேலும் படிக்க

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் லில் விளையாட தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின்போது இந்த இரு அணிகளும்தான் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கின. இந்த விவகாரத்தில் இரு அணிகள் மீதும் கடுமையான புகார்கள் உள்ள காரணத்தால் அவர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் கவாஸ்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரை …

மேலும் படிக்க

ஹேர் ஸ்டைலை பார்த்தா தெரியல டீசண்ட்டா ஆளுன்னு – சினிமா ஸ்டைல் திருடன்

சென்னையில் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்கிற நிலையில்அதனை விழுங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் முயற்சியால் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அந்த தங்கச் சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. சென்னை புனித தாமஸ் மவுண்டை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை கவனித்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு …

மேலும் படிக்க

ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில், சுமார் 3 ,300 ஏக்கர் – கோர்ட்டில் அரசு வக்கீல் பவானி சிங்

தற்போது நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில்,   சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். முன்பு முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா, சொத்துக் குவித்ததாக தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வார காலமாக …

மேலும் படிக்க

மத்திய மந்திரியை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளர் மீது புகார்

தேர்தல் வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2014ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே  நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் …

மேலும் படிக்க

தாய்லாந்து சாட்டிலைட் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களை கண்டுபிடித்தது?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 300 பாகங்களை தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த சாட்டிலைட் படம் தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட்டில் இருந்து மார்ச் 24 ம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு நாள் முன்புதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 122 பொருட்களை பிரெஞ்ச் சாட்டிலைட்  படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பொருட்களும் தென்மேற்கு பெர்த்திலிருந்து சுமார் 2700 கி.மி தொலைவில் இருப்பதாக …

மேலும் படிக்க

ஐ.பி.எல்.பிக்ஸிங் – சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை நீக்குங்கள் – சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

மாட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் தடை மற்றும் சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடி பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். …

மேலும் படிக்க