அமுரா

ரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன் 2ம் பாகத்தில் அஜீத்?

எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர். ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் …

மேலும் படிக்க

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7 ல் விசாரணை!

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு வருகிற ஜூலை 7ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கை 5 பேர் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்த 7 பேருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

நெட்டில் கசிந்த இது நம்ம ஆளு! டீசர் அதிர்ச்சியில் படக்குழு

நீண்ட இலைவெளி மற்றும் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் சிம்பு, நயந்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் இது நம்ம ஆளு ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இதுவும் வியாபார யுத்தியோ? இப்ப டீசர் கூட திருட்டுதனமா வெளியிடுறாங்களோ?

மேலும் படிக்க

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …

மேலும் படிக்க

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது- உயர்நீதிமன்றம்

மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, சந்திரன்பாபு, இஸ்மாயில் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். கல்யாணி மதிவாணன், பேராசிரியராக பணியாற்றாமல் இணை பேராசிரியராக மட்டுமே பணிபுரிந்ததால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் …

மேலும் படிக்க

“லிங்கா” ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியீடு

கோச்சடையான் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் இரட்டை வேடங்களில்  நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் மைசூர் பகுதி உள்பட பல இடங்களில் நடந்தது. படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி காந்தின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் …

மேலும் படிக்க

பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கு மொத்தமுள்ள 500 இடங்களுக்கு …

மேலும் படிக்க

ஐசிசி தலைவரானார் சீனிவாசன்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான …

மேலும் படிக்க

கங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்

கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை …

மேலும் படிக்க

பிஹாரில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி, 11 பேர் காயம்

தில்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீகார் மாநிலம் கோல்டன்கார்க் அருகே திடீரெனெ தடம் புரண்டது.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் 4 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டது. பிஹார் மாநிலம் சாப்ரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் வந்தடைந்தது. சாப்ரா ரயில் நிலையத்தில் …

மேலும் படிக்க