“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். …
மேலும் படிக்கவட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்
வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக கூட்டம் இராயபுரம், அறிவகம் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கசென்னையில் குடிநீர் பஞ்சம்? கோடையை எப்படி சமாளிக்க போகிறார்கள் மக்கள்? ஜீனியஸ் பார்வை
பருவ மழை சரியான அளவு பொழியாத காரணத்தினால் குடிநீர் பஞ்சம் மெதுவாக தமிழகம் முழுவதும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது இந்நிலையில் சென்னையை பொறுத்த வரை ஒரளவுக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர்வரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் மனம் தளராமல், குடிநீர்வாரிய உயர் அதிகாரிகள் ஆந்திரா சென்று பேசி பார்த்தும் பயனில்லாமல் வாடிய முகத்துடன் திரும்பி வந்தனர். இருந்தாலும் சமாளிப்போம் என புரூடா விட்டு, மே மாதம் …
மேலும் படிக்கசென்னை இராயபுரத்தில் குடிநீரில் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி
இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு பகுதிகளி்ல் கடந்த இருபது நாட்களாக வீடுகளில் உள்ள குழாய் மூலம் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு சங்கம் மூலமாக (எச்எப்எஸ்) புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்திற்கு படையெடுத்தனர். அங்கு …
மேலும் படிக்கசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு சுமுகமான முடிவுக்கு வரலாம் என கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த கைவிடப்பட்டது …
மேலும் படிக்கவீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA வின் சார்பாக கண்ணீர் அஞ்சலி
தீவிரவாதிகளின் கொடூர தற்கொலை தாக்குதலில் வீர மரணம் அடைந்த எம் 42 ராணுவ சகோதரர்களுக்கு PPFA, ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் கண்ணீர் அஞ்சலி.
மேலும் படிக்கPPFA சார்பில், சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மணலி, சின்னசேக்காடு, செயிண்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரிமா சங்க மாவட்ட ஆளுநர்(324 A5) திரு. PMJF Ln E. ரவிச்சந்திரன் அவர்களும், மணலி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.A. கண்ணகி அவர்களும் இணைந்து மானவர்கள் அணி வகுப்பை துவக்கி வைத்தனர். பேரணிக்கு Lions Club of Royapuram Heritage …
மேலும் படிக்கபாவங்கள் போக்க, கண் திறக்கும் கரி வரத பெருமாள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இடதுபுறம் திரும்பி சற்று தொலைவு நடந்து சென்றால் ஒரு பெருமாள் கோயில் தென்படும். அருகில் சென்று பெயர் பலகையைப் பார்க்கையில் கரிவரத பெருமாள் கோவில் என்றுள்ளது. கோவிலில் நுழைந்ததும் அர்ச்சகர் நம்மை வரவேற்று கருவறைக்கு அழைத்து செல்கிறார். இறைவன் பிரம்மாண்ட வடிவமாக கரிவரத பெருமாளாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். …
மேலும் படிக்கஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா! டியுஜே கடும் கன்டனம்
14 – 02 – 2019 ஆளுநரை காப்பாற்ற பத்திரிகையாளர்களை தாக்கும் காவல்துறைக்கு டி.யூ.ஜே கடும் கண்டனம் ! – டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆளுநர் மாளிகைப் புகழ் பேராசிரியை நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர் விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்தனர் போலீசார். இந்த தாக்குதலில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. …
மேலும் படிக்கமெட்ரோ ரயில் பயணம்! ஜீனியஸ் டீவியின் அலசல்!
வண்ணாரப்பேட்டையிலிருந்து 11,12 தேதிகளில் பொதுமக்களுக்காக இலவசமாக மெட்ரோ ரயில் பயணம். இலவசம் என்றதும் அலை அலையாக குடும்பத்துடன் பலர் இங்கிருந்து மீனம்பாக்கம் வரை சென்று திரும்பினார்கள். நாமும் நமது பங்காக ஜீனியஸ் டீவிக்காக மக்களோடு கலந்தோம். பயணம் செம ஜாலி என சொன்னவர்கள் பயணக்கட்டணத்தை பார்த்ததும், நம் பர்ஸ் காலி என ரொம்பத்தான் வருத்தப்பட்டனர்.மெட்ரோ பயணம் 13ந் தேதியும் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளனர். தினசரி ரூ.100 ல் காலை …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி