அமுரா

‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம்

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த …

மேலும் படிக்க

“அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது”

ஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாய்த் தெரிவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநேர மற்றும் உடல்நலத் தரவுகளை ஆராயும்போது வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு, வாரத்துக்கு நாற்பது மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் …

மேலும் படிக்க

எகிப்ப்தின் தலைநகர் கெய்ரோவில் குண்டுவெடிப்பு; 29 பேர் காயம்

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் வட பகுதியில் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்தில், சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 காவலர்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின் சத்தமும் அதிர்வும் நகரின் பல பகுதிகளில் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் இந்த குண்டு வெடித்தது. “காரில் வந்த ஒரு ஆள் இந்தக் கட்டடத்திற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு, பின்னால் வந்த மோட்டர் பைக்கில் ஏறிச்சென்றுவிட்டார். …

மேலும் படிக்க

விஜய் நடிக்கும் “புலி” டிரைலர்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு 12 மணிக்கு சோனி நிறுவனம் வெளியிடப்பட்டது. யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை கண்டு களித்து ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க

இன்று இரவு 12 மணிக்கு விஜய் நடிக்கும் “புலி” படத்தின் டிரைலர் வெளியீடு

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. Cant handle the wait? Neither can …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் 6 ம் ஆண்டு மற்றும் ஜீனியஸ் விருதுகள் வழங்கிய விழா

‘வாசகர்களின் பேராதரவோடு, வித்தியாசமான வகையில் மாத இதழை கொண்டு வருவது இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு சிரமம் என்பது அத்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த வகையில் 60 மாதங்கள் என 5 வருடங்களை கடந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும். ‘ஜினியஸ் ரிப்போர்ட்டர்’ தமிழ் மாத இதழக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடத்துகிறோம். வந்து பாருங்க.. என விடுத்த அழைப்பினை ஏற்று நாம் விழா அரங்கான இராஜா …

மேலும் படிக்க

உதிர்ந்து போன அக்னி சிறகுகளின் உதிராத உணர்வுகள்

“ மரணம் என்பது என்னை எப்பொழுதுமே அச்சுறுத்தியதில்லை, எல்லோரும் ஒருநாள் போய்ச்சேர வேண்டியவர்கள்தான் என்று சொன்னதோடு மட்டுமின்றி மரணத்தை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மக்களிடம் இருந்து பிரியா விடைபெற்று சென்றிருக்கிறார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபூதின் அப்துல் கலாம் அவர்கள்” “இளைஞர்களே! இந்தியாவை பற்றி கனவு காணுங்கள்’’ எனும் தாரக மந்திரம் பூட்டி கிடந்த, இருளடைந்து போன பல இளைஞர்களின் இதயக்கதவுகளை “சுயமுன்னேற்றம்” எனும் திறவுகோலால் திறக்கப்பட்ட மந்திரச்சாவி, கடற்கரை ஓரத்தில் …

மேலும் படிக்க

கொச்சியில் உலகின் முதலாவது சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையம் திறப்பு

உலகிலேயே சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் செயல்படும் விமான நிலையத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று திறந்து வைத்தார். கொச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் முதற்கட்டமாக கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார …

மேலும் படிக்க

மங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 கி.மீ. உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை …

மேலும் படிக்க

இந்தியாவில் இந்தியரை அவமானப்படுத்திய இஸ்ரேல் காப்பி கடை

இமாசலப் பிரதேசம் கசோலில் இந்தியப் பெண் ஒருவர் இஸ்ரேலிய காபி ஷாப் ஒன்றில் உணவு தராமல் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரபரப்பாக பரவி வருகின்றது. கசோலில் அமைந்துள்ள மிகப் பிரபலமான இஸ்ரேலிய காபி ஷாப்பில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காபி ஷாப் பெரும்பாலும், இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் என்றும், இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அக்கடையினைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். ஸ்டீபன் கயே என்கின்ற டெல்லியினைச் சேர்ந்த …

மேலும் படிக்க