ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் …
மேலும் படிக்கஅணுகுண்டு தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் புதிய திட்டம்
அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகினால், கடல் பகுதியில் இருந்து அணுகுண்டுகள் தாங்கிய சிறிய ரக ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் “தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில், பாகிஸ்தானின் நிலப்பரப்பில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மையங்கள் அனைத்தும் அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் அழிய நேரிட்டாலும், அதற்கு பதிலடி தரும்வகையில் புதிய …
மேலும் படிக்கநான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்
சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: “சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய …
மேலும் படிக்கரஷ்யாவில் போர் எதிர்ப்பு பேரணி
கிழக்கு உக்ரைனை ரஷ்யாவுடன் சேர்க்க அங்குள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் கடந்த ஏப்ரல மாதம் முதல் உக்ரைன் அரசு படையுடன் போரிட்டு வருகிறார்கள். இரண்டு மாகாணங்களை கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இந்துவரை இங்கு நடந்த தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.இதனால் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.இந்த நிலையில் உக்ரைன் …
மேலும் படிக்கமங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு வட்டத்தை எட்டியது: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்
இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO’s Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் “மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி …
மேலும் படிக்கதிருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு!
திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 5 அஞ்சலகங்களில், விரைவில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக, திருப்பதி அஞ்சலக அதிகாரி சர்மா தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, அஞ்சலகங்களில் அஞ்சல்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல், பல மக்கள் நலப்பணிகளும் தொடங்கி சிறந்த முறையில் இயங்கி வருகிறது. அதில், திருப்பதி தலைமை அஞ்சலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, சந்திரகிரி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் உள்ள …
மேலும் படிக்க“மெட்ராஸ்” புதிய டீசர்
“மெட்ராஸ்” புதிய டீசர்
மேலும் படிக்ககத்தி படத்தின் தீம் மியுசிக் காப்பியா?
கத்தி படத்தின் போஸ்டர் ஆங்கில பத்திரிக்கையின் காப்பி என விமர்சனம் எழுந்தது நினைவிருக்கலாம், அதை தொடர்ந்து கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் காப்பி அடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கத்தி படத்தின் இசையமைப்பாளர் அனிருத். DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில ஆல்பத்தில் இருந்து மியூசிக்கை எடுத்து, வேறு ஒரு இண்ஸ்ட்ரூமெண்டில் வாசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் ட்யூனை அச்சு பிசகமால் பயன்படுத்தியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் விமர்சனம்
Jail for Jayalalitha. Her to govern is like giving a garland of flowers to a monkey or asking a donkey to appreciate Kalpura incense aroma. — Subramanian Swamy (@Swamy39) September 20, 2014 தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான வகையில் டிவிட் செய்துள்ளார் சுப்ரமணிய சுவாமி. தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறாக …
மேலும் படிக்கடெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்
கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது. டெல்லியில் உள்ள திகார் …
மேலும் படிக்க