அமுரா

திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்.25-இல் சென்னையில் தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை: கடந்தாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. வரும் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு …

மேலும் படிக்க

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக இருந்த 530 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த  18-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 1,486 பேர் போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் …

மேலும் படிக்க

ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் ராஜினாமா

ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அலெக்ஷ் சால்மண்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கை தோல்வியடைந்தது. ‘ஒரு தலைவராக எனது காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்கான பிரசாரம் தொடரும், அந்தக் கனவு மரணித்துவிடாது’ என்று கூறினார் அலெக்ஸ் சால்மண்ட். ‘ஸ்காட்லாந்துக்கு சுதந்திரம் கோரிய ‘யெஸ்'(ஆம்)– பிரசாரப் போராட்டத்தை இட்டும் எங்களின் கோரிக்கைக்கு வாக்களித்த 1.6 …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெண்கலம் வென்றது

தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை சுவேதா சௌத்ரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தென் கொரியாவின் அதிபர் பார்க் ஜூன் ஹீ முறைப்படி, ஆசியப் போட்டியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபல நடிகை லீ யங், ஆசியப் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: கண்கவர் கலை நிகழ்ச்சிகள் வீடியோ

தென் கொரியாவின் இன்சியானில் வெள்ளிக்கிழமை 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு தொடக்க விழா நடைபெறவுள்ளது. கிளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வென்ற பதக்கங்களை (64) விட, இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் காமன்வெல்த்தை விட ஆசியப் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சீனா, தென் கொரியா, …

மேலும் படிக்க

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி அமெரிக்கர்?

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார். அவரது நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா ஆவார். வழக்கறிஞரான வர்மா அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பணியாற்றியுள்ளார். இந்திய ராஜீய அதிகாரி ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் தொடர்பில் விசா மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற ஆண்டு நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான …

மேலும் படிக்க

ஸ்காட்லாந்து பிரிவினை வாக்கெடுப்பு தோல்வி: 55.30 % பேர் பிரிவினையை நிராகரித்தனர்

யுனைட்டட் கிங்டத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப் பிரதேசங்களில், டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் மட்டுமே ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக …

மேலும் படிக்க

‘ஐ’-யை முந்திய ‘கத்தி’

அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று கத்தி …

மேலும் படிக்க

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், “இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு …

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்தித்தார் பில்கேட்ஸ்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இந்தியா வந்த பில் கேட்ஸ், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ், பிரதமர் மோடி அறிவித்துள்ள கிளீன் இந்தியா திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே …

மேலும் படிக்க