அமுரா

ஐபோன் 6, ஆப்பிள் வாட்ச் வெளியாகின: இந்தியாவில் செப்.26 முதல் விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும்  அப்பிள் வாட்ச் ஆகியன நேற்றிரவு வெளியிடப்பட்டன.கலிபோர்னியாவில் நடைபெற்ற  விழாவில் அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் இவற்றை அறிமுகப்படுத்தினார். ஆசியாவின் இரண்டாவது பெரிய‌ வர்த்தகச் சந்தையான  இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- செப்டம்பர் 26ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஐபோன் 6 மற்றும் …

மேலும் படிக்க

யுக்ரைனில் ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டுள்ளது – மலேசியப் பிரதமர்

யுக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைத்தான் ஹாலாந்து விசாரணை அறிக்கை காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். விமானம் விழுந்த இடத்தில் உள்ள எஞ்சிய உடல் பாகங்களை கண்டெடுக்க அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரசாக் கேட்டுள்ளார். விமானம் ஏன் கிழே விழ்ந்தது என்பதையும் இந்தக் குழு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை?

சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், …

மேலும் படிக்க

வட சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா – PPFA

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை,  இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் …

மேலும் படிக்க

மறுபடியும் உலக அளவில் அவமானப்பட்டார் சுப்ரமணிய சுவாமி

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கானோர் பிஞ்சுக் குழந்தைகள் உட்பட சுமார் 2500 பேரை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைகள் தொடர்பான செய்திகளில் இந்தி  ‘ஷோலே’ திரைப்படக் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்று ஸ்கீர்ன்ஷாட் ஒன்றை சுப்ரமணிய சுவாமி சில நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார். அதில் இது  மஞ்சள் பத்திரிகைத்தனம் என அவர் குறிப்பிட்டுருந்தார். இது ஃபேஸ்புக்கில் படுவேகமாக பரவியது. …

மேலும் படிக்க

TNPSC குரூப் 2 – இன்டர்வியூ போஸ்ட் முடிவுகள் வெளியீடு

கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி நடந்த குரூப் 2 – இன்டர்வியூ போஸ்ட் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. TNPSC இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். முதன்மைத் தேர்வு(Main Exam)9  08.11.2014 அன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in/results/csse2K12_seldoc_final.pdf

மேலும் படிக்க

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றச்சாட்டு குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும், சிபிஐ இயக்குநர் பதவியில் …

மேலும் படிக்க

பாஜகவினர் குதிரை பேரம் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஆம் ஆத்மி

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலை பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி. டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. கவர்னரும்  அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை அழைக்கலாம் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாரதிய ஜனதாவினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலை பேசும் வீடியோக்களை இன்று ஆம் ஆத்மி அதிரடியாக வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மியின் …

மேலும் படிக்க

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-6-9-2014 அன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரை, மாநில தேர்தல் ஆணையத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, பின்னர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தபோது, …

மேலும் படிக்க