இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகளால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு …
மேலும் படிக்கதமிழகத்தின் மாவட்ட நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் விசாரணையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கறிஞர் சோலை சுப்ரமணியம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த …
மேலும் படிக்கபிரேதப் பரிசோதனை அறிக்கை திருத்தப்பட்டதா? சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவில் புதிய திருப்பம்
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவு இயற்கையாக நடந்ததாக அறிக்கை தயாரிக்கும்படி பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் குழு தலைவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனந்தா புஷ்கரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்தும்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசிதரூர் மற்றும் குலாம் நபி ஆசாத் தம்மை வற்புறுத்தியதாக எய்ம்ஸ் மருத்துவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சில மாதங்களுக்கு முன்னர் …
மேலும் படிக்ககதை திரைக்கதை வசனம் இயக்கம் – டிரைலர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
மேலும் படிக்கநெதர்லாந்து வென்றால் விண்வெளிக்கு இலவச பயணம்: நெதர்லாந்து நிறுவனம் பரிசு
நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கோப்பையை தட்டி வந்தால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில் …
மேலும் படிக்ககச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது:சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத் தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தனது …
மேலும் படிக்கஜூலை 7 முதல் பொறியியல் பொது கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு
பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 27-ல் தொடங்க இருந்த பொறியியல் பொது கலந்தாய்வு உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி தள்ளிவைக்கப்பட்டது. புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரி ஏஐசிடிஇ-யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 10 கல்லூரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலந்தாய்வு தொடங்கும் தேதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஜூன் 27-ல் …
மேலும் படிக்கசென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு 2014 ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை (ஜூலை 2) மாலை வெளியிடப்பட உள்ளன. www.results.unom.ac.in உள்ளிட்ட மேலும் சில இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மறு மதிப்பீடு: பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டு முதல் முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்டு வருபவர்கள் தேர்வு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் …
மேலும் படிக்கவட சென்னை, ஈகிள் பவர் குங்ஃபூ பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா
ஈகிள் பவர் குங்ஃபூ பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் வீர தீர விளையாட்டு சாகச நிகழ்ச்சிகள் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை யில் உள்ள வைத்தி திருமண ஹாலில் கடந்த 22/06/2013 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் திரு. என். பாஸ்கரன் MA., BL., அட்வகேட், CBI, பிரசிடெண்ட், ஈகிள் பவர் குங்ஃபூ பள்ளி மற்றும் திரு கே. ஜானகிராமன் Bcom., அசிஸ்டெண்ட் பிரசிடெண்ட் இவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு …
மேலும் படிக்கமண்ணூர்பேட்டை மசூதியில் ரமலான் நோன்பு, சஹர் உணவிற்காக சிரமப்படும் வெளியூர் மக்களுக்கு இலவச சஹர் உணவு)
சென்னை, அம்பத்தூர் எஸ்டேட், மண்ணூர்பேட்டை நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் சஹர் உணவிற்காக சிரமப்படும், குறிப்பாக வெளியூர் மக்களுக்கு இலவச சஹர்(அதிகாலை உணவு) சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இந்தியா முழுவதிலிமிருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் இரவுப்பணிகளிலும், சமைக்க இயலாத நிலையிலும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாத நோன்பு நோற்பதற்கான சஹர் உணவுக்கு மிகவும் …
மேலும் படிக்க