செய்திகள்

இந்தியாவில் இந்தியரை அவமானப்படுத்திய இஸ்ரேல் காப்பி கடை

இமாசலப் பிரதேசம் கசோலில் இந்தியப் பெண் ஒருவர் இஸ்ரேலிய காபி ஷாப் ஒன்றில் உணவு தராமல் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரபரப்பாக பரவி வருகின்றது. கசோலில் அமைந்துள்ள மிகப் பிரபலமான இஸ்ரேலிய காபி ஷாப்பில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காபி ஷாப் பெரும்பாலும், இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் என்றும், இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அக்கடையினைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். ஸ்டீபன் கயே என்கின்ற டெல்லியினைச் சேர்ந்த …

மேலும் படிக்க

அண்ணா பல்கலைகழகம்: கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் டிசம்பர்’2016 முதல் அமல்

அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள கேள்வித்தாள் நடைமுறை மாற்றம், நிகழாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பொறியியல் முடிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து, திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்காக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் 9 பேர் குழுவை பல்கலைக்கழகம் நியமித்தது. இந்தக் குழு புதிய தேர்வு …

மேலும் படிக்க

உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா அடையார், இந்திரா நகர், இளைஞர் விடுதியில் (15.08.2015) அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ) சார்பாக நடைபெற்றது. பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த தோழர் தராசு ஷியாம் அவர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இலவச மருத்துவ முகாம் தொடக்கி வைத்து பேசிய டாக்டர் C.M.K.ரெட்டி பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சங்க …

மேலும் படிக்க

முற்றிலும் மாறுபட்ட சூழலில் இம்முறை இலங்கைத் தேர்தல்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல் கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக …

மேலும் படிக்க

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்

இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது. அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார். விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு மானியம் ரத்தா? பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும், …

மேலும் படிக்க

சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை: பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்

இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …

மேலும் படிக்க