முக்கியசெய்திகள்

பொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள்.

பொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம்  தொடரும். 5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி. வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் …

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( 07-07-2014 – திங்கட்கிழமை) தொடங்கியது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு என்ஜினியரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 570 கல்லூரிகளில் உள்ள பி.இ. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருடம் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் …

மேலும் படிக்க

தமிழகம் வழியாக கெயில், எரிவாயுக் குழாய் பதிப்பு: நீதிமன்றத் தடை நீட்டிப்பு

தமிழகத்தில் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டித்துள்ளது. வேளாண் நிலங்களுக்கு இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மூன்று வார காலம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி …

மேலும் படிக்க

அரசியல் அரைவேக்காடு யார்?- கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் …

மேலும் படிக்க

அவசர நேரத்தில் உங்களை காப்பாற்றும் மொபைல் ICE (In Case of Emergency) எண்.

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் …

மேலும் படிக்க

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்தை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி ரெகுபதி …

மேலும் படிக்க

சென்னை பல்கலைகழகம் இளநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 5) வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகத்தின்  www.unom.ac.in இணைய தளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது செல்பேசியில் Result space UNOMUG space மற்றும் பதிவு எண் என டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு: 2011-12 கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் …

மேலும் படிக்க

ஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர் கொச்சி வந்தனர்

ஈராக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேரும் ஏர்இந்தியா விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கொச்சி புறப்பட்ட அவர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இந்திய செவிலியர்களை கேரள முதல்வர் உமன்சாண்டி வரவேற்றார். மேலும் ஈராக்கில் சிக்கி தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க

போரூர் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 61, தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்கள்

போரூர் கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்ற கோர கட்டிட விபத்தில் நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடனும், 50 பேர் பிணங்களாகவும் …

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை

உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் …

மேலும் படிக்க