அமுரா

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; …

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன், சரத்குமாரின் மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் …

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 …

மேலும் படிக்க

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், 2-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஃபெடரரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டை ஃபெடரர், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி …

மேலும் படிக்க

ஆஃப்கானிஸ்தானில் கைதிகளை விடுதலை செய்த தலிபான் தீவிரவாதிகள்

ஆஃப்கானிஸ்தானில் காஸ்னி சிறையில் காவலர்களைக் கொன்றுவிட்டு சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை ராணுவ உடையில் வந்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தின் முக்கியச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். சிறைக்காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 352 கைதிகளை தப்பவைத்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் …

மேலும் படிக்க

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை …

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல்  நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …

மேலும் படிக்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் புதிய  கருவிகளான ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் முறையே 4.7 மற்றும் 5.5 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது. புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புதிய …

மேலும் படிக்க

வரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்

இம்மாதம் 27ம் தேதி வானில் தென்பட உள்ளது சூப்பர் மூன்.  இந்த முறை 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவீதம் மேலும் பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அன்று தான் முழு சந்திர கிரகணமும் நிகழ்ப்போகிறது. இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுவதால் நிலவானது ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் …

மேலும் படிக்க