அமுரா

உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி: அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றி, அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாநகராட்சி மேயர், 4 நகராட்சித் தலைவர்கள், ஒரு பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்ந்தெடுக் கப்பட்டனர். கோவை மாநகராட்சி மேயர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர், நான்கு …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோஷல்

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலம் வென்றார் அபினவ் பிந்த்ரா

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று தனது தொழில்முறை துப்பாக்கி சுடுதல் போட்டியை நிறைவு செய்த அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்று தந்துள்ளார். தென்கொரியாவின் இன்சியானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியின் 4-வது நாளில் 10 மீட்டர் ஆண்கள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 6- ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்து …

மேலும் படிக்க

கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடிகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என அறிவித்த மத்திய அரசுக்கும், உணவுப் …

மேலும் படிக்க

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் பறந்து செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குள் சென்றது. செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ …

மேலும் படிக்க

என்கவுண்டர்களுக்கு FIR கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

என்கவுண்டர் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டரை எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் உபகரணத்திலோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினரின் என்கவுண்டரை மாநில சிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும். அனைத்து என்கவுண்டர் வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். விசாரணை அறிக்கையும் பதிவு செய்யப்பட வேண்டும். என்கவுண்டரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை காவலர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியதும் …

மேலும் படிக்க

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளார் 31,708 வாக்குகள் பெற்றார். பிற கட்சிகள் 1305 வாக்குகள் பெற்றுள்ளன. கோவை கோவையில், அதிமுக வேட்பாளர் கணபதி 1,13,180 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் 37,585 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் …

மேலும் படிக்க

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி: உயர் நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் …

மேலும் படிக்க

அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் புதிய திட்டம்

அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகினால், கடல் பகுதியில் இருந்து அணுகுண்டுகள் தாங்கிய சிறிய ரக ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் “தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில், பாகிஸ்தானின் நிலப்பரப்பில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மையங்கள் அனைத்தும் அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் அழிய நேரிட்டாலும், அதற்கு பதிலடி தரும்வகையில் புதிய …

மேலும் படிக்க

நான்கு அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: “சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய …

மேலும் படிக்க