முக்கியசெய்திகள்

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …

மேலும் படிக்க

மக்கள் நலப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதித்துள்ள மக்களின் பசிப்பிணியினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பல்வேறு உதவிகளை பல்வேறு கட்டமாக செய்து வருகிறது. இந்நிலையில் இன்று 16-05-2020, சனிக்கிழமை மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உள்ள நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் நலனுக்காக உழைத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 16.05.2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் தலைமையில், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில அமைப்பு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ்மாத இதழின் …

மேலும் படிக்க

சென்னை திருவேற்காட்டில், மருத்துவ கம்பெனி மேலாளரின் வீட்டில் திருடியவர்களுக்கு “காப்பு” கட்டிய காவல்துறை…

திருவேற்காடு பல்லவன் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் திரு. தியாகராஜன். இவர் பிரபல மருத்துவ கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஊரடங்கிற்கு முன்பு , தன் மனைவியின் வளைக்காப்பிற்காக திருவாரூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். உடனே ஊர் திரும்ப முடியாத நிலையில் ,இவரது வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 03.05.2020 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 1/2 பவுன் …

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் தொகுதி வாரியாக உணவின்றி தவித்த பகுதி மக்களுக்கு தினந்தோரும் 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சமூக இடைவெளியோடு வழங்கப்பட்டு வருகிறது. இ‌ந்‌நிகழ்வின் துணைத் தலைவர்கள் …

மேலும் படிக்க

இராயபுரம் எம்.எஸ்‌. கோவில் தெருவில் மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட இராயபுரம் எம்.எஸ்‌. கோவில் தெருவில், கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது. ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “ஜீனியஸ்” கே.சங்கர்

மேலும் படிக்க

பூமித்தாய்!

எனைத்தாங்க யாருமில்லைஎன ஏங்காதே…..எல்லோரையும் தாங்கும்பூமி அதை மறக்காதே……அனைவருக்கும் அதுதான் சாமி அதனை மாசாக்காதே…..முன்னூறு மீட்டா் கடைக்குச்செல்ல எடுக்காதே ஸ்கூட்டர்….. பூமித்தாயின் மூச்சிற்குபோடாதே ஸ்சட்டா்…..மூன்றாவது மாடி செல்லஎதுக்கு மின்தூக்கி படிஏறினால் இறங்கும் பாரன்ஹீட் பூமியில்….மக்கும் மக்கா குப்பைகளை பிாித்துக்கொட்டினால் மங்காது வாழ்வு மாசற்ற பூமியில் பல கோடியாண்டு….போற்றிப் பாதுகாப்போம் பூமியைஎல்லோருக்கும் தாயான சாமியை….. பாமரன்…

மேலும் படிக்க

இறைவா காப்பாற்று..!

கீரிடம் தரித்த நச்சே! மானுடம் எரித்ததே உன் வீச்சே! அரசனென்ன! ஆண்டியென்ன! ஊரென்ன! உலகென்ன! விலையில்லா உயிர்களையே! கொத்துக் கொத்தாய் உருட்டி விடுவதென்ன!ஆலகாலம் உண்டு ஆபத்பாந்தவனாய் அகிலம் காத்திட்ட…தொண்டைக் குழியினில் நஞ்சை நிறுத்திய, நஞ்சுண்ட எம் சாமியே! யாவரையிம் காத்திடுவாய் ஆலவாய் ஈசனே முக்கண்ணால் எரித்திடுவாய்! முழு உலகம் காத்திடுவாய் உடலற்ற அந்நச்சை உருத்தெரியமலே….. முத்துக்குமார், ரயில்வே

மேலும் படிக்க

கொரோனா உலக யுத்தம்! மீண்டும் கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்

கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் மூன்றாகுமதுஇல்லறக்கணக்கு…ஒன்றோடு …

மேலும் படிக்க

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சுபகரகுடிநீர் வழங்கிய இராயபுரம, கிரேஸ் கார்டன் நண்பர்கள்….

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காத்திடும் வண்ணம் “சுபகரகுடிநீர்” இராயபுரம், கிரேஸ் கார்டனில் உள்ள சாய்பாபா திருக்கோயில் மற்றும் கிரேஸ் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக  பகுதி வாழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” கே. சங்கர்

மேலும் படிக்க