செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை

மெட்ரோ ரயில்களில் கூடுதல் பயணிகளை ஈர்க்க 3 வகையான கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது. சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதன் பிறகு வார நாட்களில் …

மேலும் படிக்க

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 6 பேர் பலி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர், தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் (30). இவர் சென்னையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று திருமண நாள் என்பதால் குடும்பத்தாருடன் காரில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா …

மேலும் படிக்க

வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள்

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் நெருங்கி வருவதால், அங்கு வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு, சென்னை ஆயக்கர் பவனில் சிறப்பு வருமான வரி படிவம் தாக்கல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் வருமான வரி தாக்கல் செய்ய மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதன் வழிமுறைகளை எளிமையாக்கும் நோக்கத்துடன் 34 சிறப்பு கவுண்டர்களை வருமானவரி தலைமை ஆணையர் ஸ்ரீவஸ்தவா, சென்னை …

மேலும் படிக்க

தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது, கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாது என கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல்   தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டீல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறினார். கர்நாடகம் கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் உள்ள காவிரிநீரை குடிநீர் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கர்நாடக …

மேலும் படிக்க

ஒடிசா அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு

ஒடிசா மாநில தலைநகர் கட்டாக்கில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில் 7 குழந்தைகள் உயிரிழந்தன. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள், குழந்தைகள் சிகிச்சை மைய வளாகத்தை பூட்டி, நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என தற்போது …

மேலும் படிக்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்

ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் …

மேலும் படிக்க

ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல், தமிழ்நாட்டில் 12 நகரங்கள்

ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் இன்று வெளியிட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் அமைந்துள்ளது. மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் காஷ்மீரில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்களின் பெயர்களை அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் 98 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை …

மேலும் படிக்க

திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். திருமாவளவன் என்னிடம் பழகிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். டிஜிபி அலுவலகத்தி லும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் அளித்ததால் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை போலீஸ் கமிஷனர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இழந்ததால்தான் இந்த புகாரை முதல்வரின் தனிப் பிரிவில் …

மேலும் படிக்க

குஜராத்தில் படேல் சமூகத்தினர் போராட்டத்தில் வன்முறை: பலி 9 ஆக அதிகரிப்பு

இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 …

மேலும் படிக்க

என்எல்சி போராட்டம் தற்காலிக வாபஸ்: தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 39 நாட்களாக என்எல்சி தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நெய்வேலியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தி 24% ஊதிய உயர்வு வழங்க …

மேலும் படிக்க