முக்கியசெய்திகள்

ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விட்டு பொறியியல் மாணவர் தற்கொலை

மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், தீபாவளியன்று அதிகாலை 2.10 மணிக்கு தனது பேஸ்புக் முகவரியில் ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என குறிப்பிட்டு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று ஷேக்முகமது …

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 1.1.2015-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் …

மேலும் படிக்க

ரஜினிக்கு சல்மான் கான் சவால்!

இந்திய பிரதமர் மோடி துவங்கி வைத்த ’தூய்மையான இந்தியா’ போட்டி நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளர் குப்பைகள் நிறைந்த பகுதியை சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நபரை போட்டிக்கு அழைத்து சவால் விடவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இதன் அடிப்படையில் நரேந்திர மோடி, சல்மான் கான் உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்தார். போட்டியை ஏற்றுக்கொண்ட சல்மான் கான் குப்பையாக கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, சில வீடுகளுக்கு வெள்ளையும் அடித்தார். தற்போது …

மேலும் படிக்க

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு, 1.11.2014 முதல் அமல்: தமிழக அரசு

ஆவின் நிறுவனத்தின் சமன்படுத்திய பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியின் போது, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்து கூட பணம் அளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தனது கொள்முதலையே குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு ஆவின் நிறுவனம் தள்ளப்பட்டது. …

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்

இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் அமைப்பு அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர சம்பளம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை ‘தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக’ …

மேலும் படிக்க

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் பிரபலமடைந்த இவர், ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இலட்சிய நடிகர் என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் இருந்து செயல்பட்டார். பின்பு அரசியலிருந்து ஓய்வுபெற்ற அவர், …

மேலும் படிக்க

பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தின் போது மூலவர், …

மேலும் படிக்க

மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் நுழைந்து ஒரு மாதம் நிறைவு

இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் (இஸ்ரோ) சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம்  கடந்த மாதம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இன்றுடன் ஒருமாத காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி  மங்கல்யான் விண்கலம் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து …

மேலும் படிக்க

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற விரும்புகிறது கர்நாடக அரசு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் குடைச்சலில் இருக்கிறது கர்நாடக அரசு. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும்புகிறது. செப்.27ல் ரூ.66.65 கோடி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் அடைக்கப்பட்ட மத்திய சிறைச்சாலை வளாகத்திலும், சிறைச்சாலையைச் சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் …

மேலும் படிக்க

ஆர் எஸ் எஸ் தலைவரின் உரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டதால் சர்ச்சை

இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்றழைக்கப்படும் ‘ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் இன்று நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆற்றிய உரை இந்திய அரச தொலைக் காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இந்துக்களின் நாடு என்ற கோட்பாட்டை முன் நிறுத்தும் அமைப்பு ஆர் எஸ் எஸ். நாட்டையாளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் …

மேலும் படிக்க