தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களாக சில பத்திரிக்கைகள் உண்மைக்கு மாறாகவும்,அவர்களே கற்பனை செய்து கொண்டும் தலைவருக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு செய்திகளை எழுதி வருகிறார்கள்.இந்த தகவல்கள் …
மேலும் படிக்கசீனாவின் முதல் விண்வெளி நிலையம் 2022ம் ஆண்டில் முடிவடையும்
சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டு நிறுவப்போவதாகக் கூறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளி நிலையம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் இது குறித்த விவரமான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறார்கள். புதிய விண் ஆய்வுக் கூடம் ஒன்று இரண்டாண்டுகளில் தொடங்கப்படும்; அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் பிற அமைப்புகள் உருவாக்கப்படும். சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்வெளியில் கலன்களை பொருத்தும் …
மேலும் படிக்ககனடா அருகே 160 வருடங்களுக்கு முன்பாக காணாமல்போன கப்பல் கண்டுபிடிப்பு
160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரிட்டனின் ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். “இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது” என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார். சர் ஜான் ஃப்ராங்க்ளின் 1845ஆம் வருடத்தில் கனடா நாட்டை ஒட்டியுள்ள ஆர்ட்டிக் பிரதேசத்தில் அட்லாண்டிக் …
மேலும் படிக்கஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது : சந்திரசேகரராவுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் எச்சரிக்கை
ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் கூறினார். தெலங்கானா குறித்து அவதூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடி ஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.
மேலும் படிக்ககிரானைட், தாது மணல் கொள்ளை குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் …
மேலும் படிக்கஅவமதிக்கும் மீடியாக்கள் புதைக்கப்படுவர்: சந்திரசேகர ராவ் அதிரடி மிரட்டல்
தெலுங்கானா மாநிலம் நாக்காலாகுட்டாவில் கவிஞர் காலோஜி நாராயணராவின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் மாலை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தெலுங்கானா மாநிலத்தை அவமதிப்பர்வகள் பூமிக்கடியில் 10 அடி ஆழத்தில் புதைக்கப்படுவார்கள். தெலுங்கானா மாநிலத்தை அவமதிக்கும் மீடியாக்களை மண்ணில் புதைப்போம் என்று கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்திர சேகரராவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய …
மேலும் படிக்ககந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?
பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி …
மேலும் படிக்கஐபோன் 6, ஆப்பிள் வாட்ச் வெளியாகின: இந்தியாவில் செப்.26 முதல் விற்பனை
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும் அப்பிள் வாட்ச் ஆகியன நேற்றிரவு வெளியிடப்பட்டன.கலிபோர்னியாவில் நடைபெற்ற விழாவில் அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் இவற்றை அறிமுகப்படுத்தினார். ஆசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகச் சந்தையான இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- செப்டம்பர் 26ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஐபோன் 6 மற்றும் …
மேலும் படிக்கயுக்ரைனில் ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டுள்ளது – மலேசியப் பிரதமர்
யுக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைத்தான் ஹாலாந்து விசாரணை அறிக்கை காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். விமானம் விழுந்த இடத்தில் உள்ள எஞ்சிய உடல் பாகங்களை கண்டெடுக்க அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரசாக் கேட்டுள்ளார். விமானம் ஏன் கிழே விழ்ந்தது என்பதையும் இந்தக் குழு …
மேலும் படிக்கபத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை?
சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி