செய்திகள்

சிண்டு முடியும் வேலையை விடுங்கள்: மு.க. ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்ற பிறகே மாவட்டங்கள் தோறும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களாக சில பத்திரிக்கைகள் உண்மைக்கு மாறாகவும்,அவர்களே கற்பனை செய்து கொண்டும் தலைவருக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு செய்திகளை எழுதி வருகிறார்கள்.இந்த தகவல்கள் …

மேலும் படிக்க

ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது : சந்திரசேகரராவுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் எச்சரிக்கை

ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் கூறினார். தெலங்கானா குறித்து அவதூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடி ஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

கிரானைட், தாது மணல் கொள்ளை குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் …

மேலும் படிக்க

அவமதிக்கும் மீடியாக்கள் புதைக்கப்படுவர்: சந்திரசேகர ராவ் அதிரடி மிரட்டல்

தெலுங்கானா மாநிலம் நாக்காலாகுட்டாவில் கவிஞர் காலோஜி நாராயணராவின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் மாலை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தெலுங்கானா மாநிலத்தை அவமதிப்பர்வகள் பூமிக்கடியில் 10 அடி ஆழத்தில் புதைக்கப்படுவார்கள். தெலுங்கானா மாநிலத்தை அவமதிக்கும் மீடியாக்களை மண்ணில் புதைப்போம் என்று கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்திர சேகரராவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய …

மேலும் படிக்க

கந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?

பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர்.  கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி …

மேலும் படிக்க

ஐபோன் 6, ஆப்பிள் வாட்ச் வெளியாகின: இந்தியாவில் செப்.26 முதல் விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும்  அப்பிள் வாட்ச் ஆகியன நேற்றிரவு வெளியிடப்பட்டன.கலிபோர்னியாவில் நடைபெற்ற  விழாவில் அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் இவற்றை அறிமுகப்படுத்தினார். ஆசியாவின் இரண்டாவது பெரிய‌ வர்த்தகச் சந்தையான  இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- செப்டம்பர் 26ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஐபோன் 6 மற்றும் …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை?

சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், …

மேலும் படிக்க

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம்

பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-6-9-2014 அன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரை, மாநில தேர்தல் ஆணையத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, பின்னர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தபோது, …

மேலும் படிக்க

தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்

தமிழகத்தில், 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் 41 இடங்களில் இயங்கி வருகின்றன. வாகன ஓட்டிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த …

மேலும் படிக்க

பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம், பாதுகாவலர்கள் எங்கே? அதிர்ச்சி படம்

பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அருகில் பிரபல ரவுடி இருப்பது போன்ற ஒரு படம் இணையதளங்களில் உலா வருகிறது. இது பற்றி ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், வரிச்சூர் செல்வத்தின் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன, பலமுறை சிறை சென்ற இந்த ரவுடி மீது ஒரு முறை போலிஸ் என்கவுண்டர் …

மேலும் படிக்க